சந்தானத்தின் டகால்டி திரைக்கு வருகின்றது
சந்தானம் , யோகிபாபு நடிக்கும் டகால்டி திரைக்கு வரவுள்ளது. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அண்மையில் சில நகைச்சுவை படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம். அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு டகால்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தின் கதை
வில்லன் கனவில் ஒரு பெண்ணை ஓவியமாக வரைகின்றார்.
அதில் இருக்கும் பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடச் சொல்லி தமது ரவுடிகளுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கிடையே சந்தானத்திற்கும் ரவுடி ராதாரவிக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது. இதில் சந்தானத்தை உடனடியாக கொல்லும்படி ராதாரவி சொல்ல அவரின் வீட்டில் ரவுடியின் கனவில் வந்த ரித்தியின் படத்தை சந்தானம் காண்கிறார். இது யார் என விசாரித்து தனக்கு இவரைத் தெரியும் எனக் கூறுகிறார். இதனால் ஒரு கிழமைக்குள் அந்த பெண்ணை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராதாரவி சொல்ல சந்தானம் ரித்தியை தேடுகிறார். மும்பையில் ரித்தியை கண்டு தனது கதையால் ரித்தியை சென்னைக்கு அழைத்து வந்து ராதாரவியிடம் ஒப்படைக்கிறார். அதன் பின்னர் அந்த ரித்தியை சந்தானம் காப்பாற்றுகிறாரா?என்பதே மீதிக்கதை.