கரவெட்டி இருதய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி
யாழ்.கரவெட்டி திருஇருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி 06.02.2020. இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அதிபர்.க.சிறீஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக இ.ராகவன் ஓய்வுநிலை அதிபர், சிறப்பு விருந்தினர்களாக .இ.யாதவன், சோ.ரமேஸ் மற்றும் கெளரவவிருந்தினராக அருட்பணி அ.ப.அன்ரனிப்பிள்ளை பங்குத்தந்தை கரவெட்டி ஆகியோர் பங்கு பற்றி இருந்ததுடன் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசில்கள் அணிவித்து கெளரவித்தார்கள்