சத்துணவு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பினால் மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை புதிய வருடத்தின் தொடக்கத்தில் மனித உரிமைகளுக்கான கிராமம் (Village for human rights) என்ற நிறுவனத்தின் பணிப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டையின் அமைப்பாளருமான திரு.முருகவேல் சதாசிவம் அவர்களினால் இரண்டு முன்பள்ளிகளுக்கு சத்துணவுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இச்சத்துணவுத் திட்டம் மூளாய் வேரம் ஞானப்பிரகாசம் முன்பள்ளி மற்றும் பொன்னாலை கல்விளான் காந்திஜி முன்பள்ளி ஆகிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விற்றமின் சத்துக்கள் அடங்கிய சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கும் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இம் மாணவர்களுக்கான சத்துணவை வழங்குவதற்கு இந் நிறுவனத்தின் பணிப்பாளராகிய முருகவேல் சதாசிவம் அவர்களின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.