சட்டவிரோத மண் அகழ்வை தடுக்கக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
சாவகச்சேரி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்ழ்வு செய்வதை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மகஜர் கையளித்தனர்.
இந்நிகழ்வு இன்று சாவகச்சேரி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாவகச்சேரி பிரதேச மக்களால் “மக்கள் எழுச்சி” என்ற பேரில் மண் அகழ்வை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி ஒழங்கமைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஸ் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் அ.பாலமயூரன் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ மயூரன் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன்
பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்