ஆவரங்கால் தாக்குதலின் இரண்டாவது தாக்குதலாளி கைது
கடந்த வாரம் ஆவரங்கால் பகுதியில் வாளினால் ஒரு இளைஞரை வெட்டிய மூவரை போலீசார் தேடி வந்த பொழுது பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இரண்டாவது சந்தேகநபரை அச்சுவேலி உப பொலிஸ் பொறுப்பதிகாரி சியாலன் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் ஜனவரி எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.