கொழும்பு காணி தொடர்பில் நடிகர் விஜய்க்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்
நடிகர் விஜய்க்கு சொந்தமான கொழும்பு நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் மனைவி சங்கீத சொர்ணலிங்கத்தின் பெயரில் உள்ள நிலமே போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொட்டஹேனா பகுதியில் உள்ள இந்த நிலத்தின் பெறுமதி 800 மில்லியன் ஆகும். கொரோனா நெருக்கடிக்கு சற்று முன்னதாக நிலத்தை விஜய் வாங்கினார் எனினும், போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை விற்பனை செய்த தகவல் பின்னர் தெரிய வந்தது.
இது குறித்து நடிகர் விஜய் தரப்பினால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, இரு நாட்டு பொலிசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.