கொரோனா தாக்கமானது 2022 வரை நீடிக்கும் என உலகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழாம் ஒன்று தற்பொழுது உள்ள தரவுகளை ஆராய்ந்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கும்வரை இது நிலைத்திருக்கும் என்றும் தெரியவருகிறது.