கொடிகாமத்தில் புகையிரதம் நிறுத்தப்படாது.
கொடிகாமம் புகையிரத நிலையத்தில் புகையிரத சேவை நிறுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமத்தில், கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை நேற்று இரவு முதல் முடக்கப்பட்டதால். எந்தவொரு புகையிரதமும் கொடிகாமம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படாது. பயணிகள் சாவகச்சேரி புகையிரதநிலையத்தை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து (மு.ப 11.50) கடுகதி புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகள் பளை அல்லது யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இறங்கலாம்.