Fri. May 3rd, 2024

கேலிக்கூத்தாகும் இலங்கையின் சட்டம், ராஜித சேனாரத்ன பிணையில் வெளியே, ரூமி மும்மது பிணை மனு நிராகரிக்கப்ட்டு உள்ளே

முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முகமதுவுக்கு பிணை பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது
அவர் தற்போது ஜனவரி 06 ஆம் தேதி வரை “வெள்ளை வேன்” பத்திரிகையாளர் சந்திப்புடன் தொடர்பு பட்டத்திற்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையிலேயே அவருடைய பிணை மனு இன்று (02) கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்னே முன் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை முன்னின்று நடத்திய முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணை பெற்றுக்கொண்டதுடன் சிறைச்சாலைக்கு செல்லாமல் தனியார் வைத்தியசாலையில் தனது சிறைக்காலத்தை கழித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்