Fri. May 17th, 2024

கசிப்பை இல்லது ஒழிக்க வேண்டும்: இல்லையேல் தற்கொலை செய்வேன்!! -9 மாத குழந்தையுடன் தாய் வீதியில் இருந்து போராட்டம்-

கிளிநொச்சியில் நடக்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாது ஒழிக்காவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று கூறி தாய் ஒருவர் 9 மாத குழந்தையுடன் வீதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தை சேர்ந்த 30 வயதான தாயே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த பிரதேசத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது. இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் இல்லை. கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது. எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், இப்படி சொல்ல முயாத அளவுக்கு கசிப்பு பாவனையால் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்துள்ளேன். இனியும் என்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பில் கிராம அலுவலர், மற்றும் காவல்துறையினருக்கும் அறிவித்தும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்