Mon. Apr 29th, 2024

கலைமதி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

நவிண்டில் கலைமதி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட  தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று முன்தினம்  குறித்த கழக  மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் அரையிறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து  அல்வாய் மனோகரா அணி
மோதியது. நவிண்டில் கலைமதி அணி வீரர்கள் ஆட்டம் ஆரம்பமாகி 05வது நிமிடத்தில் பில்லா 09வது நிமிடத்தில் தேவராஜ்  15வது நிமிடத்தில் விது ஆகியோரால் அடுத்து கோல்களை போட்டு மனோகரா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். ஆனால் சற்றும் சளைக்காமல் போராடிய அல்வாய் மனோகரா அணி வீரர் சுயாந் இரு கோல்களை போட்டு அசத்த இடைவேளைக்கு முன்னர் நவிண்டில் கலைமதி அணி 3:2 என்ற கோல் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் நவிண்டில் கலைமதி அணியினருக்கு தண்டனை உதை கிடைத்தது. இதனை அவ்வணி வீரர் பில்லா சரியாக பயன்படுத்தி கோலாக்க ஆட்டநேர முடிவில் நவிண்டில் கலைமதி அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்