Sun. Apr 28th, 2024

கருவியின் 10ம் ஆண்டு நிறைவு விழா

கருவியின் 10ம் ஆண்டு நிறைவு தசவிழா
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்  எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கருவி நிறுவனத் தலைவா் திரு.க.தா்மசேகரம் அவா்களின் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவா் திருமதி.கோசலை மதன் அவா்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளா் செல்வி. அகல்யா செகராஜா அவா்களும், கௌரவ விருந்தினா்களாக வலிகாமம் கல்விவலய  உதவிக்கல்விப் பணிப்பாளா் சுப்ரமணியம் ஸ்ரீகுமரன் அவா்களும், KARUVI (SRDA)-UK அறங்காவலா் சபைத் தலைவா் சிவாஜி சேகரம் அவா்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனா்.
கருவியின் 10 ஆண்டு செயற்பாடுகள் தொடா்பான விடயங்கள் மற்றும் அனுபவங்கள் என்பன இந்நிகழ்வில் நினைவு கூறப்படவுள்ளன. இந்நிகழ்வில் பயணத்தின் நாட்கள் எனும் கருவி நிறுவனத்தின் 10ஆண்டு ஆவணத் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்