யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் நடாத்தும் யாழ் மாவட்ட லீக் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மின்னொளியில் நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் ஆவரங்கால் ஏ.கே.எவ் அணியை எதிர்த்து அரியாலை கில்லாடி அணியும் மோதவுள்ளது.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் அ.ரவிவர்மன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவுள்ளார்.