Sat. Apr 20th, 2024

புலோலி வடமராட்சி கிழக்கு லயன் அணி சம்பியனாகியது

வடமாகாண லயன்ஸ் கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் புலோலி வடமராட்சி கிழக்கு லயன்ஸ் கழக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில்  புலோலி வடமராட்சி கிழக்கு லயன் அணியை எதிர்த்து சாவகச்சேரி லயன் அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்ற புலோலி வடமராட்சி கிழக்கு அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்ய சாவகச்சேரி லயன் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
புலோலி வடமராட்சி கிழக்கு லயன் அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சாவகச்சேரி லயன் அணியினர் 5 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 36 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.
அதிகபட்சமாக தர்சன் 16 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அஜந்தன் 2, நீலன், ஸ்ரீராம் மற்றும் பிரதாபன் தலா ஒரு இலக்கினை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புலோலி வடமராட்சி கிழக்கு லயன்ஸ் அணியினர் 2.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தனர்.
அவ்வணி சார்பாக பிரதாபன் 21 ஓட்டங்களையும் நவதீபன் 11 ஓட்டங்களை பெற்றனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரதாபனும் சிறந்த பந்துவீச்சாளராக அஜந்தனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தர்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்