கனடாவிலிருந்து யாழ் வந்த முதியவர் விபத்தில் சாவு!!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சாவடைந்துள்ளார்.
கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் வந்த முதியவர் சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று இரவு சாவடைந்துள்ளார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மீசாலை வடக்கு பகுதியினை சேர்ந்த சின்னத்தம்பி சுந்தரலிங்கம் (வயது-83) என்பவரே உயிரிழந்தவராவார் என்று பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.