Sun. Apr 28th, 2024

எல்லேயில் எல்லையைக் கடந்து சென்தோமஸ் பெண்கள் சாதிப்பு

சிறந்த களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தால் சென்தோமஸ் அணி சம்பியனாகியது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து அல்வாய் நக்கீரன் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை சென்தோமஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் சுவிதா 2 ஓட்டங்களையும் றொசானா,  சிலக்சனா ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனக் களம் இறங்கிய அல்வாய் நக்கீரன் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் ஜெனோசா ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்