Mon. May 13th, 2024

கிராம உத்தியோகத்தர்களும் போராட்டத்தில் குதிப்பு

நாளை மறுதினம் வியாழக்கிழமை கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் அத்துல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார்.
21/04/2022 அன்று Zoom தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும், 23/04/2022 அன்று Zoom தொழில்நுட்பம் குறித்து கிராம அலுவலர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் எடுக்கப்பட்ட முடிவுகளின்
அடிப்படையில் நாளை மறுதினம்  வியாழக்கிழமை அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து அன்றைய தினம்  எவ்வித கடமையிலும் ஈடுபடாதிருத்தல். அத்துடன் எதிர்வரும் 04ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இருந்து காலி முகத்திடல் வரை நடைபெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் மத்திய செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இயன்றளவு உறுப்பினர்களும் இணைந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்