“என்னை நோக்கி வரும் தோட்டா” திரைப்படம் நவம்பர் 29ம் திகதி வெளியீடு
இரண்டு வருடங்களாக தடைப்பட்ட “என்னை நோக்கி வரும் தோட்டா” திரைப்படம் நவம்பர் 29ம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் காதல் மற்றும் அதிரடி திரைப்படம் தான் என்னை நோக்கி வரும் தோட்டா.
கெளதம் மேனன் இத்திரைப்படத்தை இயக்கி தயாரிக்கின்றார்.
கே புரடெக்சன் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களின் நிதிப் பிரச்சனையால் இத் திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது.
பாகுபலி 2 தெலுங்குப் படத்தை தமிழில் விநியோகம் செய்த கே.புரடெக்சன் நிறுவனம் தயாரிப்பாளருக்கு 17 கோடி ரூபா கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சிந்துபாத் மற்றும் என்னை நோக்கி வரும் தோட்டா திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சிந்துபாத் திரையிடப்பட்டு வெற்றி பெறாத நிலையில் என்னை நோக்கி வரும் தோட்டா திரைப்படம் சற்று தாமதமாக எதிர்வரும் 29ம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.