உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் எவ்விதமான அநீதிகளையும் இழைக்காது பரீட்சை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.