கரவெட்டி சுகாதார பிரிவில் 17 பேர் உட்பட 47 பேருக்கு தொற்று
கரவெட்டி சுகாதார பிரிவில் 17 பேர் உட்பட
யாழ் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில்
கரவெட்டி சுகாதார பிரிவில் 17 பேருக்கும், யாழ் சுகாதார பிரிவில் 10 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 14 பேருக்கும் தெல்லிப்பளை சுகாதார பிரிவில் இருவருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைவிட வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எந்தெந்த பகுதிகளில் எவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ள விபரம் பின்னர் அறிவிக்கப்படும்)