இலங்கையில் தனியார் சட்டம் தொடர்பான கலந்துரையாடல்
நெல்லியடி சதுரங்க சமூகத்தின் பெளர்ணமி தின கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 23 ஜூலை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு Yarl Beach Hotel மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சட்டத்தரணி திருமதி வைஷ்ணவி சண்முகநாதன் அவர்களின் தலைமையில் “இலங்கையினுடைய தனியார் சட்டங்கள்” குறிப்பாக தேசவழமை சட்டம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகள் மாத்திரம் உள்ளதால் பங்குபெற்ற விரும்புபவர்கள் nelliadychesscommunity@gmail.com /0765433508 மூலமாக தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.