கரவெட்டி சுகாதார பிரிவில் 12 பேர் உட்பட 101 பேருக்கு தொற்று
நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் 88 பேர் உட்பட வடமாகாணத்தில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரவெட்டி சுகாதார பிரிவில் 12 பேருக்கும், தெல்லிப்பளை சுகாதார பிரிவில் இருவருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் ஒருவருக்கும், காரைநகர் சுகாதார பிரிவில் 12 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 4 பேருக்கும், வேலணை சுகாதார பிரிவில் 3பேருக்கும், மருதங்கேணி சுகாதார பிரிவில் ஒருவருக்கும், நல்லூர் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், பருத்தித்துறை சுகாதார பிரிவில் 4 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் இருவருக்கும், சங்கத்தானை சுகாதார பிரிவில் 8 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 15 பேருக்கும், ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் இருவருக்கும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 8 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேருக்கும், உடுவில் வைத்தியசாலையில் ஒருவருக்கும், பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் ஒருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 88 பேருக்கும், வவுனியா தெற்கு சுகாதார பிரிவில் 10 பேருக்கும், அக்ராயன் சுகாதார பிரிவில் இருவருக்கும், மன்னார் சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என வடமாகாணத்தில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.