Tue. Apr 30th, 2024

இறுதி வரை திக் திக் ஆட்டம் இறுதிக்குள் நுழைந்தது உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி.

இறுதி வரை திக் திக் ஆட்டம் இறுதிக்குள் நுழைந்தது உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி.
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்திய அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் இரு அணிகளுக்கும் கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை இரு அணிகளும் தவற விட்டனர். இருப்பினும் 22வது நிமிடத்தில் இமையாணன் மத்திய அணி வீரர்
கவிமேனன் சிறப்பான கோலைப் பதிவு செய்து முதலாவது பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பமானதும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி ஆட்டத்தை சமநிலைபடுத்த பல முறை முயற்சித்த போதிலும் இமையாணன் மத்திய அணி பின்கள வீரர்களின் தடுப்பால் முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. ஆனால் ஆட்டம் இறுதி வரை வெற்றிக்காக உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி போராடினர். இதன் பயன் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கும் போது உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி வீரர் சஞ்சீவன் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 6:5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியின் பின்கள வீரன் கௌதமன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்