Wed. May 1st, 2024

இன்றைய பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி  த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இதில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் 13 பேருக்கும்,  யாழ் மருத்துவ பீட ஆய்வுகூட பரிசோதனையில் 6 பேருக்கும் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.  இன்று  அனுராதபுரம்  போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த  6 பேருக்கும்,
தெல்லிப்பழையைச் சேர்ந்த  3 பேருக்கும்,  நல்லூரைச் சேர்ந்த  2 பேருக்கும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே சமயம்  இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில்  100 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 355  பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில்  எவருக்கும்  தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
*

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்