பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று புதன்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவரும், வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த 91 வயதுடைய ஒருவரும் என இருவர் உயிரிழந்துள்ளனர்.