Thu. May 2nd, 2024

இந்தியாவின் கவிதை போட்டி, யாழ் மாணவிகள் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய கவிதை போட்டியில் வடமராட்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் இருவர் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வாசிப்பை சுவாசிப்போம் பேரவை நடாத்திய
“மானிடம் ஈர்த்த மரங்கள் ” எனும் கவிதை போட்டியில் இலங்கை யாழ்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக் கழக இரண்டாம் வருட மாணவிகளான  பாலசுப்பிரமணியம் கிருபாலினி, கருணாநிதி. நிதுசா  இருவரும் சிறப்பு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கிருபாலினி தனது இளமைக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும், வதிரியைச் சேர்ந்த கருணாநிதி நிதுஷா வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும் தமது பாடசாலை கல்வியை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்