Thu. May 2nd, 2024

இணுவில் பகுதியில் வீதியில் நின்றவர்களுக்கு வாள் வெட்டு

இணுவில் பகுதியில் வீதியில் நின்ற இருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில்
இணுவில் காரைக்கால் சிவன் கோயிலடி பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது.
குறித்த பகுதியைச் சேர்ந்த இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சையிக்கிளில் வந்த 5 பேர் வாள் வெட்டை நடாத்தியதாக தெரியவந்துள்ளது. இணுவில் பகுதியில் அடிக்கடி வாள் வெட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் பலமுறை கைது செய்யப்பட போதிலும் சில நாட்களில் பிணை மூலமோ அல்லது விடுதலையாகியோ இருக்கிறார்கள். வாள் வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு நீதி மன்றங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்