Sat. May 4th, 2024

ஆலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலை நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல்

பருத்தித்துறை பிரதேச செயலத்திற்குட்பட்ட ஆலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலை நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாணவர்களின் உளநிலை  ஆரோக்கியமாக அறநெறிகளும்,  ஆலயங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.  சில ஆலயங்கள் பணத்தினை வங்கியில் போட்டு வைக்கிறார்களே ஒழிய, அதனை சரியான வகையில் பயன்படுத்த தவறுகின்றனர். மாணவர்கள் சிலர் தற்போது பெரியவர்களை மதிக்கும் பண்பும் குறைவடைந்துள்ளது. இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாகவே இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்