ஆடை வடிவமைத்தல், மனைப்பொருளியல், அழகுக்கலை டிப்ளமோ பயிற்சியாளர்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், மனைப்பொருளியல், அழகுக்கலை டிப்ளமோ பயிற்சியாளர்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை உடுப்பிட்டி கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கரவெட்டி உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி.பா.கஜானி ஆகியோரும்,
சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுனேத்திரா சுதாகர் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் தி.வரதராசன், இமையாணன் கிராம அலுவலகர் த.சுதர்சன், உடுப்பிட்டி தெற்கு கிராம அலுவலகர் யோ.சுசீந்திரன், வடமராட்சி தெற்கு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச பொருளாளர் திருமதி சி.பிறேமதி , வடமராட்சி தெற்கு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச செயலாளர் திருமதி.வி.ஜெயச்சந்திரா , இமையாணன் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திருமதி.வி.திலகவதி, உடுப்பிட்டி தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திருமதி.ப.ஜனனி, உடுப்பிட்டி தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் சி.சிவனருள்கெளரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.