அல்வாயில் வாள் வெட்டு ஒருவர் உயிரிழப்பு நால்வர் படுகாயம்
அல்வாய் பகுதியில் வாள் வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சற்று முன்னர் அல்வாய் பகுதியில் நடைபெற்றுள்ளது. இரு குழுவினருக்கிடையே நடைபெற்ற மோதலே வாள் வெட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபரம் விரைவில்…..சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.