அமரர் ஜெபநேசன் கிண்ணம் சென்லூட்ஸ் வசம்
அமரர் ஜெபநேசன் ஞாபகார்தமாக
இரணைப்பாலை சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரில் இளவாலை சென்லூட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் இளவாலை சென்லூட்ஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் இளவாலை சென்லூட்ஸ் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.