Wed. May 1st, 2024

அதிகாலை மதுபோதையில் பயணித்த 8 பேர் நெல்லியடி பொலீஸாரால் கைது

மதுபோதையில் வாகனத்தில் பயணித்த 8 பேரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது.
வடமராட்சி நெல்லியடி பகுதியில் கயஸ் வாகனத்தில்  அதிகாலை 3 மணியளவில் பயணித்தவர்களை நெல்லியடி சந்தியில் கடமையில் ஈடுபட்ட பொலீஸார் சோதனை செய்துள்ளனர். அதில் பயணித்தவர்கள் மது போதையில் காணப்பட்டதால் 8 பேரையும் பொலீஸார் கைது செய்துள்ளனர். 8 பேரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்,  மரணச் சடங்கொன்றில் கலந்து விட்டு வீடு திரும்பும் போதே பொலீஸார் கைது செய்துள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்