Sun. May 5th, 2024

அக்கரைப்பத்தன சந்திரிகாமம் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகிஉள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்படட இந்த வியாபித்து காரணமாக சந்திரிகாமம் பகுதியில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக 9 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் இடம்பெயர்நது சந்திரிகாமம் தமிழ் மகாவித்யாலத்தில் தற்காலிகமாக தங்கி உள்ளார்கள் . டயகம பொலிஸாரின் தகவலின் படி, காயங்கள் எதுவும் இன்றி அனைவரும் மீட்கப்பட்ட்தாகவும் , பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது . பொலிஸாருடன் இணைந்து அப்பகுதி மக்கள் இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் . மின் ஓழுக்கு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்ட்தாக பொலிஸார் சந்தேகின்றனர்.
அக்கரைப்பதன பிரதேச சபை பாதிக்கப்படடவர்களுக்கான உதவிகளை வழங்கிவருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்