கஞ்சா வைத்திருந்த பெண் கைது
துன்னாலை கிழக்கு பகுதியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்ததன் பேரில் பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தேடுதல் நடாத்திய போது 34 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.