Fri. Apr 19th, 2024

இலங்கை இராணுவத்தினரின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளிகளுக்கான உணவுகள்  வழங்கப்பட்டது.
பருத்தித்துறை 551 காலாட்படைப் படையினரால் இச்செயற்பாடு இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நேற்றும், இன்றும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு RWP RSP ndu, தளபதி பாதுகாப்பு படைகளின் (யாழ்ப்பாணம்) வழிகாட்டுதலின் பேரில், மேஜர் ஜெனரல் எம்.கே.ஜெயவர்தனா ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டி, 55 காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி, 551 காலாட்படை படைப்பிரிவு தலைமையகம் மற்றும் 16 வது பட்டாலியன் ஸ்ரீலங்கா லைட் காலாட்படை படையினரால்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, பிணவறை கட்டிடத்தை வண்ணமயமாக்கி, பாதையை அமைத்துடன், அனைத்து நோயாளிகளுக்கும்  மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கை தளபதி 551 காலாட்படை படையணி மற்றும் கட்டளை அதிகாரி 16 (V) SLLI ஆல் மேற்பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்