Fri. May 3rd, 2024

குத்துச்சண்டையில் குமுறியது முல்லைத்தீவு மாவட்ட அணி

வடமாகாண மாவட்டங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சம்பியன் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.
மாகாண விளையாட்டுத் திணைக்கள ஏற்பாட்டில் மாவட்ட அணிகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டிகள் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 7 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள்,  3 வெண்கல பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும்,
வவுனியா மாவட்ட அணி 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள்,  ஒரு வெண்கல பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாமிடத்தையும்,
யாழ்ப்பாண மாவட்ட அணி 2 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள்,  ஒரு வெண்கல பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில்
முல்லைத்தீவு மாவட்ட அணி 3 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள்,  2 வெண்கல பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும்,
வவுனியா மாவட்ட அணி 2 தங்கப் பதக்கங்கள்,  ஒரு வெண்கல பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாமிடத்தையும்,
யாழ்ப்பாண மாவட்ட அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்