Fri. Apr 26th, 2024

இலங்கையில் பாரிய ஆட் சேர்ப்பு முயற்சியில் கட்டார் விமான சேவை நிறுவனம்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தனது உலகளாவிய செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை எதிர்வரும் மாதங்களில் மேம்படுத்துவதற்கும் இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்க தீர்மானித்துள்ளது

2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் இந்த நிறுவனம் இலங்கை பிரஜைகளிடமிருந்து பல்வேறு பிரிவுகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கவுள்ளது

இலங்கையில் இருந்து கத்தார் ஏர்வேஸ், கத்தார் டூட்டி ஃப்ரீ, கத்தார் ஏவியேஷன் சர்வீசஸ், கத்தார் ஏர்வேஸ் கேட்டரிங் கம்பெனி, கத்தார் விநியோக நிறுவனம் முதல் தியாஃபத்தினா ஹோட்டல்கள் வரை அதன் பல்வேறு பிரிவுகளுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளது

நாட்டில் கத்தார் ஏர்வேஸின் ஆட்சேர்ப்பு இயக்கம் 2022 செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கத்தார் ஏர்வேஸ் இணைய பக்கத்தின் மூலம் ஆன்லைனில் வேலைகளுக்கு தற்பொழுதே விண்ணப்பிக்கலாம்: https://qatarairways.com/recruitment.
மேலதிக தகவல்களை கத்தார் ஏர்வேஸ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்