ஒரு நாளுடன் பெற்றோல் தீர்ந்தது மக்கள் ஏமாற்றம்
ஒரு நாளுடன் வடமராட்சிக்கு வழங்கப்பட்ட பெற்றோல் நிறைவடைந்துள்ளது.
வடமராட்சிப் பகுதியில் இன்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்பட்டது. இருப்பினும் இன்றே பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இமையாணன், நெல்லியடி, மந்திகை பகுதியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.