வடமராட்சி பகுதியில் பெற்றோல் விநியோகம் ஆரம்பம்
வடமராட்சிப் பகுதியில் பெற்றோல் வழங்கப்பட்டு வருகிறது. கொழுத்தும் வெயிலிலிலும் மக்கள் எரிபொருளை நிரப்பி வருகின்றனர். வடமராட்சிப் பகுதியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
இதில் இன்று சற்று முன்னர் நெல்லியடியிலும் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய எரிபொருள் நிலையத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவு மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.