உச்சிலம்மன் கோயிலடியில் திருடர்கள் கைவரிசை
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிழக்கு உச்சிற் புவனேஸ்வரி அம்மன் கோயிலடியில் திருட்டுக்கு முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றிருக்கலாம் எனத் அறியப்படுகிறது.
ஆலயக் குருக்கள் காலை பூஜைக்கு வந்து கதவைத் திறந்து பார்த்த பொழுது களஞ்சிய அறை உடைக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கூரை ஓட்டினைப் பிரித்து திருடர்கள் உள்ளே இறங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலயத்தில் பொருத்தப்பட்ட இரண்டு கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு, பின்பக்க இரும்புக் கதவும் உடைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பான விபரங்கள் தெரியவில்லை எனவும் அறிப்படுகிறது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டமையால் பெறுமதி மிக்க பொருட்களை களவாடுவதற்கான திட்டமாக அமைந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வடமராட்சி பகுதியில் ஆலயங்களை நோக்கி திருடர்கள் தமது கைவரிசையை தொடர்ச்சியாக காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. எனவே பொலீஸார் கவனமெடுத்து திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.