இரண்டு மாத ஆண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
பிறந்து இரண்டு மாதங்களே ஆன ஆண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துன்னாலை தெற்கு குடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த இளம் தம்பதிகளின் மகனான அஜந்தராசா அஸ்வின் இரண்டு மாதங்கள் நிரம்பிய குழந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த போது இரவு 10.30 மணியளவில் தாய் நுளம்பு குற்றிய போது கண்விழித்து பார்த்த போது தனது குழந்தையை காணாததையிட்டு பல இடங்களில் தேடியுள்ளனர். அதன் பின்னர் வீட்டின் கிணற்றில் 11.30 மணியளவில் பார்த்த போது குழந்தை சடலமாக மிததந்துள்ளார். இவரின் கையில் பித்தளை காப்பு இருந்ததாகவும் தற்போது சடலத்தில் காணவில்லை எனவும் தாயார் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தைக்கு வயது 21, தாயாருக்கு வயது 20 எனவும் இவர்களுக்கு ஒன்றரை வயதுள்ள பெண்குழந்தை ஒன்றும் உள்ளது.