சுந்தர் சி. நடிப்பில் திகில் திரைப்படம் இருட்டு
இருட்டு திரைப்படத்தை வி.ஜெட் துரை இயக்கத்தில் சுந்தர் சி. சாய் தன்ஷிகா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பற்றி திரையரங்குகளில் வெற்றிகரமாக நேற்று முன்தினம் முதல் ஓடிக்கொண்டிருக்கும் படம் இருட்டு.
மலைபகுதியில் ஒரு கிராமத்தில் நண்பகல் 12 மணிக்கு வானம் இருள்கிறது. அதனைத் தொடர்ந்து சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இதனை விசாரணை செய்யும் பொலீஸ் அதிகாரியும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
இதனால் அக் கிராமம் பெரும் அதிர்ச்சியை எதிர்கொள்கிறது.
இதனை விசாரிக்க சுந்தர் சி தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் அக் கிராமத்தில் கடமையை பொறுப்பேற்கிறார்.
அதன் பின்னர் விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர் சிக்கு பெரும் அதிர்ச்சிகள் உருவாகிறது. அவரின் பல கேள்விகளுக்கு பதில் மர்மமாகவே உள்ளது. இறுதியில் எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. திரையரங்கில் காட்சி அமைப்படன் கிரிஷ் ஜின் இசை மிரளவைக்கிறது.