Thu. May 2nd, 2024

ஆட்டோ சாரதிகள் – பேரூந்து சாரதி மற்றும் நடத்துநருடன் கைகலப்பு மூவர் கைது

நெல்லியடி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி மற்றும் நடத்துநருடன் முரண்பாட்டில் ஈடுபட்ட மூவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பேரூந்து நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட போதே ஆட்டோ சாரதிகளால் பேரூந்து சாரதி மற்றும் நடத்துநர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணையை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலையின் பேரூந்து ஊழியர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று இரவே நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் பணிப்பின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் இன்று மேலும் இருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்