மரண அறிவித்தல்
தோற்றம்
11 April, 1947மறைவு
25 December, 2020செல்லர் செல்வநாயகம் (வயது : 74)
உடுவில்
மாகியப்பிட்டி
உடுவில் இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும் மாகியைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் செல்வநாயகம் நேற்று முன்தினம் (25.12.2020) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சித்தர் தேவமலர் தம்பதியரின் அன்பு மருமகனும், ரஞ்சிதேவராணியின் அன்புக் கணவரும், செல்வந்தா (போதகர் தென்னிந்திய திருச்சபை,), ஜெயந்தி (ஆசிரியை யா/மகாஜனக் கல்லூரி), தோமஸ் துஸ்யந்தன் (துருக்கி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஜெயரஞ்சினி மற்றும் சுகந்தினி, யசோதரன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற ஆகாஷ் மற்றும் வினோஜன் (யா/பரியோவான் கல்லூரி), அபிநாஸ் (யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரி), கிறிஸ்ரிகா (உடுவில் மகளிர் கல்லூரி), கபிலக் ஷன் (க/புனித பற்றிமா கல்லூரி), கஸ்வின் (உடுவில் மகளிர் கல்லூரி), யதுஷா (க/புனித பற்றிமா கல்லூரி), ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான திரேசா நேசமலர், அன்புமலர், தேவமலர், மற்றும் பேரின்பநாயகம் (ஓய்வு பெற்ற வீதி புனரமைப்பு முகாமையாளர்), குலநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான s.v. பிரான்ஸிஸ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), எஸ்.தம்பித்துரை (ஓய்வு பெற்ற அதிபர்), மற்றும் Dr.a.யோகராஜா (ஓய்வு பெற்ற வைத்திய நிபுணர், Green memorial hospital manippay ), இராசகுலதேவி, அன்னலட்சுமி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதி ஆராதனை இன்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அளவெட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.