வல்வையின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான சொக்கர் மாஸ்ரர் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுளளது.
இதில் பிற்பகல் 3.30 மணிக்கு 3ம் இடத்திற்கான ஆட்டத்தில் கலைவாணி அணியை எதிர்த்து அண்ணாசிலையடி அணியும், பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதியாட்டத்தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து வதிரி டையமன்ஸ் அணியும் மோதவுள்ளன.
வல்வை விளையாட்டுக் கழக தலைவர் சி.ராஜ்குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் பாலன் முகுந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சி.நிசாந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.