Fri. Mar 29th, 2024

கரவெட்டியில் முருங்கங்காய் திருடியவர் நையப்புடைப்பு

வடமராட்சி பகுதியில் முருங்கங்காய் திருடிய திருடனை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் மதியம் நடைபெற்றுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள முருங்கங்காய் தோட்ட காணிக்குள் பட்டப் பகலில் உள்நுளைந்து திருட முற்பட்ட போதே  கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட திருடன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டான்.
குறித்த நபர் பருத்தித்துறை மூர்க்கப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. குறித்த திருடனை பொலீஸார் கைது செய்து நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போதிலும், தோட்ட உரிமையாளர் தனது முறைப்பாட்டை மீளப் பெற்றமையால் திருடனை பொலீஸார் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்