தும்பளையில் வீட்டு கதவு உடைத்து திருட்டு
வடமராட்சி தும்பளை பகுதியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சங்கிலி களவெடுக்கப்பட்ட சம்பவம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று தும்பளை பகுதியிலுள்ள காந்தன் என்பவரது வீட்டிலேயே இக் களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்காரர்கள் வெளியில் சென்றுள்ள போது வீட்டின் பின்புறக் கதவினை உடைத்து உள்நுளைந்த திருடன் 3பவுண் சங்கிலி, DVD Player போன்றவற்றை களவாடிச் சென்றுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.