Fri. Apr 26th, 2024

கோல் மழை பொழிந்து சம்பியனாகியது யாழ்மாவட்டம்

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட செயலக கழகங்களுகிடையிலான பெண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் யாழ்மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் யாழ்மாவட்ட அணியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கிளிநொச்சி மாவட்ட அணியினர் திணறினர்.
முதலாவது பாதியாட்டத்தில் யாழ்மாவட்ட அணி வீராகனைகள் லயன்சிகா 3 கோல்களையும், கிருசாந்தினி 4 கோல்களையும் போட முதல் பாதியாட்டத்தில் யாழ்மாவட்ட அணி 7:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்திலும் யாழ்மாவட்ட அணியின் ஆதிக்கம் தொடர யாழ்மாவட்ட வீராங்கனைகளான உமாசங்கவி மற்றும் கிருஷாந்தினி ஆகியோர் ஒவ்வொரு கோலைப் போட ஆட்ட நேர முடிவில் யாழ்மாவட்ட அணி 9:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்