Thu. May 2nd, 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாடசாலைக்கு குடிநீர் இயந்திரம் பொருத்தி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கரணவாய் தாமோதர வித்தியாலயத்திற்கு குடிநீர் செயற்றிட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
2இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினரும், இளைப்பாறிய அதிபருமான ஆ.சிவநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பெருமளவானோர்  பங்குகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்