Tue. Apr 30th, 2024

ஆலயத் தலைவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று

தென்மராட்சி கைதடி மற்றும் அல்லாரை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அல்லாரை அறுகம்புலம் மகா கணபதி ஆலய பரிபாலன சபை தலைவர் மற்றும் கைதடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத் தலைவர் கடந்த 8 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்ட போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கைதடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் இன்று தேர் திருவிழா நடைபெறுகின்ற போதிலும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளிகளைப் பேணி, முகக் கவசங்களை அணிந்து தமது வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகரால் வலியுற்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்